Thursday, December 1, 2016

கடாய் மஷ்ரூம் க்ரேவி

தேவையான பொருட்கள் 
வெங்காயம் -1
பூண்டு 5 பற்கள்
பச்சை மிளகாய் -1
மஷ்ரூம் - 220கிராம்
மிளகாய்த்தூள் -11/2டீஸ்பூன்
மல்லித்தூள்- 11/2டீஸ்பூன்
சீரகத்தூள் - 1டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2டீஸ்பூன் 
கசூரி மேத்தி - 1/2டீஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 
சர்க்கரை - 1/2டீஸ்பூன் (விரும்பினால்) 
அரைக்க 
தக்காளி-2
இஞ்சி- சிறுதுண்டு
முந்திரி - 4
தேங்காய் - கொஞ்சம் 

செய்முறை
வெங்காயம், பூண்டு இவற்றை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். 
கடாயில் எண்ணெய் காயவைத்து நறுக்கியவற்றை சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் ஓரளவு பிங்க் நிறத்திற்கு வதங்கியதும் மிளகாய்த்தூள்-மல்லித்தூள்-சீரகத்தூள்-கரம் மசாலா போட்டு வதக்கவும். (மசாலாக்கள் கருகாமல் மிதமான தீயில் வதக்கவும்.)
வெங்காயம் வதங்கும் நேரத்தில் தக்காளி -இஞ்சி -முந்திரி-தேங்காய இவற்றை மிக்ஸியில் இட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும். 
பொடிகள் மசாலா வாடை அடங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை சுருள வதக்கவும்.

பிறகு நறுக்கிய மஷ்ரூமை சேர்த்து வதக்கி, ஒரு கப் கொதிநீரை சேர்க்கவும். ( விருப்பத்திற்கேற்ப தண்ணீர் அளவை கூடவோ குறைத்தோ சேர்க்கலாம்.) 
க்ரேவி 4-5 நிமிடங்கள் கொதித்து, காளான் வெந்ததும் கசூரி மேத்தி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான கடாய் மஷ்ரூம் க்ரேவி தயார். புலாவ், சப்பாத்தி, நாண், சீரகசாதம், வெறும் சாதம் எல்லாவற்றுடனும் நன்றாக இருக்கும்.
டிவியில் ரேவதி ஷண்முகம் அவர்கள் செய்த ரெசிப்பியை பார்த்து செய்தேன்...அவர் தேங்காய் சேர்க்கவில்லை, கசகசா-வை ஊறவைத்து சேர்த்தாங்க. என்னிடம் கசகசா கைவசம் இல்லாததால் தேங்காய் சேர்த்துக்கொண்டேன். இஞ்சியையும் பூண்டையும் ஒன்றாக அரைத்து சேர்க்காமல் இப்படி பூண்டை நறுக்கியும், இஞ்சியை தக்காளியுடன் அரைத்தும் சேர்ப்பதால் சுவை நன்றாக இருக்கும் என்று சொன்னாங்க. எனக்கு அவ்வளவு டெக்னிகல் டீடெயில் எல்லாம் தெரியாதுங்க..ஆக மொத்தம் சுவையா இருந்தது. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி! :) 

1 comment:

  1. அடடே... இந்த செய்முறை நல்லாயிருக்கே.... நன்றி...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails