Wednesday, November 16, 2016

கத்தரிக்காய் கூட்டு / Brinjal koottu

தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 6
சாம்பார் பொடி - 3/4டேபிள்ஸ்பூன் 
பாசிப்பருப்பு - 1/4கப் 
உப்பு 
சர்க்கரை - 1/2டீஸ்பூன் (விரும்பினால்) 
அரைக்க
தேங்காய்த்துருவல் - 3டேபிள்ஸ்பூன்
மிளகு -5
சீரகம் - 1டீஸ்பூன் 
தாளிக்க
எண்ணெய்
கடுகு -1/2டீஸ்பூன் 
உளுந்து பருப்பு -1/2டீஸ்பூன் 
கறிவேப்பிலை -கொஞ்சம்
வரமிளகாய் -1 

செய்முறை 
கத்தரிக்காயை சிறூ துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். 
பாசிப்பருப்பை குழையாமல் வேகவத்துக்கொள்ளவும். 
அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் கத்தரிக்காய், சாம்பார் பொடி, உப்பு, தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
 கத்தரிக்காய்  முக்கால்வாசி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது மற்றும் வெந்த பருப்பைச் சேர்க்கவும்.
தேவையான தண்ணீர் ஊற்றி, (விரும்பினால்) அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும்.
 தேங்காயின் பச்சைவாசம் அடங்க, கூட்டை நன்கு கொதிக்கவைக்கவும்.
தனியாக சிறு தாளிப்பு கரண்டியில் கடுகு - உளுந்து தாளித்து , கறிவேப்பிலை -வரமிளகாய் கிள்ளிப் போட்டு வதக்கி கூட்டில் சேர்க்கவும்.
சுவையான கூட்டு ரெடி. சாதம், பொரியலுடன் பரிமாறவும்.

ABCD EFG..!!!

ABCD EFG..!!
SOMEONE SWEET HAS TURNED 3!!
:) :D B-)
36 மாதங்கள் ஓடிய வேகம் தெரியவில்லை... 2013, நவம்பர் 15-ல்  பட்டு வண்ண ரோசாவாய்ப் படுத்திருந்த என் "நச்சரிக்கும் சிட்டுக் குருவிக்கு" 3 வயது முழுமையடைந்துவிட்டது.  :)))

சில வசந்தங்கள் காத்திருந்து நான் பெற்ற பொன்வசந்தம் இன்று என் வாழ்க்கையை முழுவதுமாய்க் குத்தகைக்கு எடுத்து விரல் நுனியில் ஆட்டுவிக்கிறாள்.

என் கைக்குள் அடங்கிக் கிடந்த குட்டி மனுஷி இப்போது றெக்கை கட்டிப் பறக்கும் அருவியாய் துள்ளித் திரிகிறாள்.  சில நாட்களாய், பேனாவைக் கொடுத்து அவள் கையில் ஒரு ஸ்மைலியும் என் கையில் ஒரு ஸ்மைலியுமாய் வரைந்து கொண்டு அவ்வப்பொழுது வந்து ஸ்மைலி பத்திரமாய் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்கிறாள். :)))

வாழ்க்கை நதியில் புதிதாய் உதித்த இன்பச்சுழலொன்று நதியின் போக்கையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்களும் சந்தோஷமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். :) 

எங்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த எங்கள் பூமகளே...உலாவும் வானம்பாடியாய் வாழ்க கண்ணே!! பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு பல்லாயிரத்தாண்டு நீ நலம் வாழ வாழ்த்துக்கள்! :)) 

Thursday, November 10, 2016

பத்லா கடி (மோர்க்குழம்பு) / Pathla Kadhi

ஜெயின் கிச்சடி ரெசிப்பி பகிர்ந்திருந்த பொழுது, பக்கத்திலிருந்த பத்லா கடி / வட இந்திய மோர்க்குழம்பு ரெசிப்பி இது. புளித்த மோர் இருந்தால் சுலபமாகச் செய்துவிடலாம். 

தேவையான பொருட்கள் 
புளித்த மோர்/ தயிர் - 1 கப் 
கடலை மாவு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன் 
உப்பு 
தாளிக்க 
எண்ணெய் 
கடுகு-1/2டீஸ்பூன்
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை -கொஞ்சம்
வெந்தயம் - 7
மிளகு -5 
கிராம்பு/லவங்கம் -1

செய்முறை 
புளித்த மோருடன் ஒரு கப் தண்ணீர், கடலை மாவு, மஞ்சள்தூள் சேர்த்து கட்டியில்லாமல்  கலக்கிக்கொள்ளவும். (நான் மிக்ஸியில் பெரிய ஜாரில் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக்கொண்டேன், ஈஸி!! ;)) தயிர் உபயோகிப்பதானால் தேவையான தண்ணீரையும் சேர்த்து மிக்ஸியில் கலந்துகொள்ளவும்.) 

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து கிராம்பு -மிளகு, வெந்தயம் சேர்த்து பொரியவிடவும். நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

அடுப்பில் தணலை குறைத்துக்கொண்டு மோர்க்கலவை + தேவையான உப்பைச் சேர்க்கவும்.  குறைந்த தீயில் மோர் சூடாகி லேசாக நுரைத்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான கடி தயார். 
கிச்சடி-யுடன் கடி, இதனுடன் சுட்ட மிளகு அப்பளாம் பெஸ்ட் காம்பினேஷன் என்று காமாட்சி அம்மா சொல்லிருந்தாங்க. என்னிடம் அப்பளம் இல்லாததால் படத்திலும் இல்லை. நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்க. நன்றி! 


Thursday, November 3, 2016

ஆம்லெட்

ஆம்லெட் செய்வது என்ன பெரிய கம்ப சூத்திரமா? இதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்டா?? என்று பெரும்பாலானவர்கள் எண்ணினாலும்....அப்படி என்னதான் இருக்குன்னு படிச்சுப்பார்க்க ஒரு க்யூரியாஸிட்டியோட எட்டிப்பார்க்கிறதுக்கு பெரிய டாங்க்ஸூ!! :)))))) 

அது பாருங்க, இந்த ஆம்லெட் செய்யறது ஈஸியான வேலைதான், தோசைக்கல்ல காயவச்சோமா, அதுக்குள்ள வெங்காயத்தை நறுக்கினோமா, முட்டைய ஒடச்சு கலக்கினோமா..சுட்டு சாப்ட்டோமானு அஞ்சு நிமிஷத்தில முடியற வேலைதான். ஆனா இன்னிக்கு அதில ஒரு ஷார்ட்கட் மெதட் உங்களுக்கெல்லாம் சொல்லித்தரப்போறேன்(!!!??!! )..ஓகே ரெடி, ஸ்டார்ட் மீசிக்!! 

ஆம்லெட் செய்யற வேலை ஈஸியா இருந்தாலும் அதில மீ ஃபேஸ் பண்ணற ஒரு சில டிஃபிகல்டீஸ் ஃபார் யுவர் ரெஃபரன்ஸ் : 
1. எவர் சில்வர் கிண்ணத்தில்  முட்டைய உடைச்சு ஊத்தி ஸ்பூன் , ஃபோர்க் அல்லது விஸ்க்-ஆல முட்டைய கலக்கினா என்னோட அழகான கிண்ணங்கள் எல்லாம் காயமாகிருது யுவர் ஹானர்!! 
...சரின்னு இல்லாத மூளைய கசக்கி உலுக்கி, கண்ணாடி கிண்ணங்கள்லதான் முட்டைய உடைச்சு கலக்கணும்னு வீட்டுல ஒரு ரூல் போட்டாச்சுன்னு வைங்க. 
2. இப்ப அடுத்த பிரச்சனை..முட்டை கலக்கின கிண்ணத்தை கழுவி வைக்கிறது. என்னதான் ஆம்லெட்ட ருசிச்சு சாப்ட்டாலும் இந்த முட்டைக்கிண்ணத்தை கழுவுறது மீ-க்கு புடிக்காத வேலை...அந்த சுமெல் (!!??@@) ரொம்ப கஷ்டமா இருக்கும் கழுவி வைக்கிறதுக்குள்ள...!! 

சரி, வெங்காயமிளகாயே போடாம செய்யலாம்னா நல்லா நாலு முழம் வளத்தி வைச்சிருக்க நாக்கு அது போதாது, போதாதுன்னு மல்லுக்கட்டுது. அவசரத்துக்கு எப்பவாவது அப்படியே சாப்பிடலாம், ஆனா ஒவ்வொருக்காவும் ப்ளெயின் ஆம்லெட்டே சாப்பிட போரடிக்குதுல்ல? நீங்க என்ன சொல்றீங்க? 

இப்படியான தலையாய பிரச்சனைகளால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த சோம்பேறி டெக்னிக் ஃபார் ஆம்லெட். ஓகே, போதுமான முன்னுரை குடுத்தாச்சு, வாங்க ஆம்லெட் போட போலாம்!! 


அடுப்ப ஆன் பண்ணி, தோசைக்கல்ல வைச்சுட்டு கொஞ்சம் வெங்காயம், ஒரு பச்சைமிளகாயை பொடியா கட் பண்ணிக்குங்க. அதுக்குள்ள கல்லு காய்ஞ்சிருக்கும். ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் டைரக்ட்டா தோசைக்கல்லயே நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாயைப் போடுங்க...
கொஞ்சம் உப்பையும் தூவி நல்லா வதக்குங்க.  வெங்காயம் வதங்கினதும் முட்டைய டமால்னு உடைச்சு வெங்காயத்து மேல ஊத்துங்க...
கையோட சட்டுவத்தில முட்டைய கலக்கி, வெங்காயமிளகாயோட சேர்ர மாதிரி கலந்துடுங்க..
அப்புறம், இன்னுங்கொஞ்சம் எண்ணெய் ஊத்திட்டு, மிளகுத்தூளையும் தூவிருங்க..
ஒரு புறம் வெந்ததும், திருப்பிப்போட்டு அடுப்பை ஆஃப் பண்ணிருங்க. கல்லு சூட்டிலயே அடுத்த பக்கம் பதமா வெந்துரும். (ஆம்லெட்டோட மறுபக்கத்தை பாக்கறதுக்குள்ள, "பார்க்க அப்பெடைஸிங்-ஆவே இல்லையே!!" அப்புடின்னெல்லாம் யோசிக்கக்குடாது..கர்ர்ர்ர்ர்ர்!!)
சில விநாடிகளில் ஆம்லெட் ரெடி...தட்டில வச்சு சுடச்சுட சாப்பிடுங்க.
எப்புடி நம்ம ஷார்ட்கட்டு?? இதை விட வேற எதாச்சும் குறுக்கு வழி உங்க கைவசமிருந்தா அதையும் சொல்லுங்க!! ;) 

LinkWithin

Related Posts with Thumbnails