Sunday, February 28, 2010

வெங்காயச் சட்னி

தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் - கால்மூடி
கடலைப் பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
புளி - சிறிய கோலிக்குண்டளவு
கறிவேப்பிலை - 7இலைகள்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் -2 ஸ்பூன்
உப்பு

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

எண்ணெய் சூடாக்கி கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.

சோம்பு, கறிவேப்பிலை, மிளகாய், நறுக்கிய வெங்காயம், புளி இவற்றை வரிசையாக சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி ஆறவைக்கவும்.

கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும்.

சோம்பு வாசனையுடன் சுவையான வெங்காயச் சட்னி ரெடி..இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றுக்கு பொருத்தமாய் இருக்கும்.

குறிப்பு
  • சோம்பிற்கு பதிலாக சீரகம் சேர்த்து செய்யலாம்.
  • தேங்காய், கடலைப் பருப்பு சேர்க்காமலும் செய்யலாம்..ஆனால் சட்னி quantity கிடைக்காது...எனவே நிறைய்ய்ய்ய வெங்காயம் வதக்கி அரைக்க வேண்டும்.:)
  • சின்ன வெங்காயம் / ரெட் ஆனியன் இவற்றில் செய்தாலும் சுவையாக இருக்கும்.

Saturday, February 27, 2010

பூ போல இட்லி,புதினா சட்னி-நிறைவுப் பகுதி

பூ போல இட்லி- புதினா சட்னி தொடர்கிறது..தொடர்கிறது!! (நீங்க தப்பிக்க முடியாது..படிச்சேதான் ஆகணும்! )

முதல்பதிவில பேக்ட் இட்லி பத்தி பேசிட்டு இருந்தமில்ல? அப்படி ஆகாமல், மாவை புளிக்க வைக்க நீங்க சமைக்கும் பொழுது பக்கத்து ஸ்டவ் டாப்ல அல்லது குக்கிங் ரேஞ்ச்ல வைச்சிங்கன்னாலும் ஓகே தான்.இது கொஞ்சம் ரிஸ்க் ப்ரீ!! :)

அதுக்கு முன்னால இதுவரை நாம செஞ்ச முயற்சிகள் கரெக்ட் டைரக்ஷன்லதான் வந்திருக்கான்னு செக் பண்ணிடுவோம். மாவு இருக்கிற பாத்திரத்த கையால தூக்கிப் பாருங்க..வெயிட்டே இல்லாம இருக்கும்..மாவு நல்லா பொங்கியிருக்குங்கரதுக்கு இது ஒரு அடையாளம்.

இன்னொரு சின்ன கிண்ணத்துல கொஞ்சம் தண்ணி (பச்சைத் தண்ணி..பாத்திரம் கழுவற அவசரத்துல சின்க்- வர சுடுதண்ணி புடிச்சிரக் கூடாது) எடுத்து, இந்த மாவுல இருந்து ஒரு டிராப் எடுத்து கப்ல இருக்கற தண்ணில போடுங்க...மாவு
  • தண்ணிக்குள்ள போயி செட்டில் ஆயிடுச்சுன்னா..கேஸ் 1
  • தண்ணிக்குள்ள போயி நிதானமா மேல வந்து மிதந்தா..கேஸ்2
  • தண்ணிக்குள்ள போன ஸ்பீடுல மேல வந்து மிதந்தா..கேஸ்3
இப்போ நிதானமா ஒரொரு கேசா பாப்போம்..

கேஸ் 1 இந்த நிலைக்கு ரெண்டு காரணங்கள்..ஒண்ணு நீங்க அரிசி உளுந்து வெந்தயம் ரேஷியோ கரெக்டா போடல, உளுந்து குறைவா போட்டிருப்பிங்க. அடுத்த காரணம், இன்னும் மாவு சரியா பொங்கல..மாவு சரியா புளிக்கலைன்னா இன்னும் ஒரு ஏழெட்டு மணி நேரம் வைச்சு மறுபடியும் டெஸ்ட் பண்ணிப்பாருங்க.
முதல் காரணத்துக்கு இப்ப ஒண்ணும் பண்ண முடியாது...கமுக்கமா தோசை,இல்ல பணியாரமா ஊத்திருங்க.

கேஸ்2 உங்க இட்லி மாவு பர்பெக்ட்டா இருக்கு..தைரியமா இட்லி ஊத்தலாம்..கண்டிப்பா பூப்போல இட்லி வரும்.


கேஸ் 3 உளுந்து அதிகமா போட்டு அரைச்சிருக்கிங்க..இப்ப அதையும் சரி பண்ண முடியாது..இந்த கேஸ்ல இட்லி ஊத்தலாம், ஆனா இட்லியே தோசை மாதிரி(!!) வரும். பேசாம தோசையே சுட்டுடுங்க.

இன்னொரு விஷயம் என்னன்னா..இட்லி தட்டு இட்லி ஊத்தி வைக்கறது..முதல்ல நான் இட்லிதட்டுகெல்லாம் நல்லா ஆயில் மசாஜ் பண்ணி(!!!) அப்புறமா தான் இட்லி ஊத்துவேன். எனக்கு சுத்தமா புடிக்காத வேலை அது..ஆனா வேற வழி இல்லையே.இப்படி இருக்கும்போது, அருப்புக் கோட்டைக்கார அக்கா ஒருத்தங்க(அவங்க இருப்பது MASS -ல) ஒரு நாள் போன்ல ப்ளேட் போடும்போது பேச்சு வாக்குல, "நான் இட்லித் தட்டுக்கு எண்ணெய் தடவ மாட்டேன்..தண்ணில லசிட்டு, அந்த ஈரம் இருக்கும் போதே ஊத்திடுவேன்" னு சொன்னாங்க..அடுத்த முறை நானும் அதையே பாலோ பண்ணேன்..சூப்பரா இட்லி வந்தது..அதிலிருந்து இட்லித்தட்டுக்கு நோ ஆயில் மசாஜ்.

நீங்க ஆயில் மசாஜ் பண்ணாலும், பண்ணாட்டியும் குக்கர்ல இருந்து இட்லிய எடுத்து அஞ்சாறு நிமிஷம் ஆற வைக்கணும். இட்லித் தட்டு கம்ப்ளீட்டா ஆறினதும்தான் இட்லிய எடுக்கணும்.அவசரப்பட்டு எடுத்தம்னா அம்பேல்..இட்லி தட்டை விட்டு முழுசா வராது..நீங்க இவ்வளவு அரும்பாடு பட்ட செஞ்ச இட்லி டைரக்ட்டா சூர்யவம்சம் இட்லி-உப்புமா ஆயிடும்..ஸோ, ஜாக்கிரதையா..பொறுமையா எடுங்க..பொறுத்தார் பூமி ஆள்வார்னு பழமொழியே இருக்கில்ல?

அடுத்து தோசை ஊத்துவோமா? :)

நான் திருமணமாகி பெங்களூருக்கு வரும்போதே என் கணவர் கிச்சன் சாமானெல்லாம் வாங்கி செட் பண்ணி தனியே(!!) தனிக்குடித்தனம் நடத்திட்டு இருந்தார். இவர் வாங்கி வைச்சிருந்த தோசைக்கல்ல பத்தி சும்மா சொல்லக் கூடாது..சூப்பரான தோசைக்கல்..பேப்பர் ரோஸ்ட் மாதிரியே மெல்லிசா தோசை ஊத்தலாம் அதுல..என்ன ஒரே பிரச்சனைன்னா ஹேண்டில் உடைஞ்சுடுச்சு..அதனால இப்ப சப்பாத்தி போட யூஸ் பண்ணிட்டு இருக்கேன்.

புதுசா வாங்கிவந்த தோசைக்கல்ல செலக்ட் பண்ணதும் இவர்தான்..இந்த புது தோசைக்கல் இருக்கே, அதுக்கு எஜமான விசுவாசம் ரொம்ப அதிகங்க..தோசை சுட ஆரம்பிச்சா, சூப்பரா மொறு-மொறுன்னு வரும்..ஆனா கரெக்ட்டா "எனக்கு போதும்"-னு இவர் சொல்லறது அதுக்கு எப்படித்தான் காது கேக்குமோ தெரில, அதுக்கப்புறம் ஒரு தோசை கூட சரியா வராது. :(

கல்லு ரொம்ப சூடாகிருக்கும்னு ஹீட்-ஐ குறைப்பேன்..தண்ணிய தெளிப்பேன்..வெங்காயத்த கட் பண்ணி தேய்ப்பேன்..நீ என்ன வேணா பண்ணு,நான் இப்படித்தான்னு (என்னை மாதிரியே) பிடிவாதம் பிடிக்கும். ஊத்தப்பமா ஊத்தினாலும் கல்ல விட்டு வராது..அப்பப்போ தோசைய கல்லுல இருந்து பிரிக்கவே முடியாது..இவர்தான் வந்து ஹெல்ப் பண்ணுவார்.

"கல்லுல இருந்த தோசை நேரா என் ப்ளேட்டுக்கு வரணும்.அதுக்கப்புறம் அடுத்த தோசைய ஊத்துங்க"ன்னு அம்மாவ நான் பண்ண கொடுமைய எல்லாம் நெனச்சுகிட்டே, பிஞ்சு பிஞ்சு வந்த தோசையெல்லாம் 'எப்படியும் பிச்சுத்தானே சாபிடப்போறோம்'னு மனசத் தேத்திக்கிட்டு நான் சாப்பிடுவேன்.

இந்த வம்பு புடிச்ச தோசைக்கல்லுல அடுத்து ஒரு முறை சப்பாத்தி சுட்டுட்டம்னா சரியாயிடும்..அதுவும் அவங்க மாஸ்டர் சாப்ட்டு முடிக்கற வரைதான்..ஸோ, யாராவது வீட்டுக்கு வந்தா பழைய தோசைக்கல்லுல தான் தோசை. என்ன இருந்தாலும் ஓல்ட் இஸ் கோல்ட்தாங்க!

இப்படியாக நான் சமைத்த இட்லி, தோசை எல்லாம்தான் அங்கங்கே போட்டோல இருக்கறது. காமெடியா எழுதிருந்தாலும் இங்கே சொல்லப்பட்டிருப்பதெல்லாம் சொந்த அனுபவம்.

கண்ணில் ரத்தக்கண்ணீர் வந்த போதும்..விடாமல் இந்தப்பதிவைப் படித்துமுடித்த அன்புள்ளங்களுக்கு நன்றி, நன்றி!!!

இன்னும் மொக்கை முடியல..இங்கயும் வந்து பாருங்க. :) :)

Tuesday, February 23, 2010

ஸ்டஃப்ட் குடைமிளகாய்


தேவையான பொருட்கள்
குடைமிளகாய் - 3
ஏதாவது ஒரு பொரியல்/திக்கான கிரேவி - 2கப்
பிரெஞ்ச் பிரைட் ஆனியன்ஸ் - 1/2கப்
எண்ணெய் - 1ஸ்பூன்

செய்முறை
குடைமிளகாயின் காம்புப்பகுதியில் வட்டமாக நறுக்கி, உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிடவும்.

மிளகாயின் பாதியளவு கிரேவியை வைத்து, அதன் மீது கொஞ்சம் பிரெஞ்ச் பிரைட் ஆனியன்ஸ்-ஐ கைகளால் நொறுக்கி தூவவும்.

மீண்டும் கிரேவியை வைத்து மிளகாயை நிறைத்து இன்னும் கொஞ்சம் ஆனியன்ஸ்-ஐ நொறுக்கி தூவி, நறுக்கி வைத்த மிளகாயின் காம்பு பகுதியை வைத்து மூடி விடவும்.

மிளகாய்களின் மீது பட்டர் அல்லது எண்ணெயை நன்றாகப் பூசி 350F ப்ரீஹீட் செய்த அவன்-ல் பேக் செய்யவும். 20நிமிடங்கள் கழித்து மிளகாய்களை எடுத்து திருப்பி அடுக்கி மேலும் 25 நிமிடம் பேக் செய்யவும்.

சுவையான ஸ்டஃப்ட் குடைமிளகாய் ரெடி..பரிமாறும்போது கூர்மையான கத்தியால் பெரிய துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும். இது சப்பாத்தி, சாதம் இரண்டுக்குமே பொருத்தமாய் இருக்கும்.




குறிப்பு
உங்களுக்கு விருப்பமான ஸ்டஃபிங்-ஐ குடைமிளகாயில் நிரப்பிக்கொள்ளலாம்..பொரியல் அல்லது கிரேவி எதுவானாலும் தண்ணீர் இல்லாமல் திக்காக இருக்க வேண்டும். இங்கே நான் ஸ்டஃப் செய்திருப்பது ராஜ்மா-உருளைக் கிழங்கு சேர்த்து செய்த கிரேவி.

மிளகாயின் உள்ளிருந்து எடுக்கும் விதைப் பகுதி மற்றும் சதைப்பகுதிகளையும் வீணாக்காமல் கிரேவி செய்யும்போது அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

பிரைட் ஆனியன்ஸ் இல்லையெனில் பச்சை வெங்காயத்தையே பொடியாக நறுக்கி உபயோக்கிக்கலாம். அவன் இல்லாதவர்கள் ஒரு பானில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய்களை அடுக்கி மூடி போட்டு வேகவைக்கலாம்.

பூ போல இட்லி - புதினா சட்னி

இங்க வந்து படிக்கறவங்களுக்கெல்லாம் இந்த பதிவு உபயோகமா இருக்குமான்னு தெரில..ஆனா, எனக்கு ஒரு பிற்பகல் பொழுது போரடிக்காம கழிந்துடுச்சு..பொறுமையா படிக்கப்போகும் உங்களுக்கு நன்றி & ஆல் த பெஸ்ட்! :)))


நீங்க சவுத் இண்டியனா, எப்படி டோசா(!!??)-க்கு மாவு அரைக்கறது? -- இந்த கேள்விக்கு பதில் சொல்லி சொல்லி எனக்கு மனப்பாடம் ஆகிடுச்சுங்க..ஏன்னா இங்கே எங்க நண்பர்கள் முக்கால்வாசி வட இந்தியர்கள். அவங்களுக்கு புழுங்கல் அரிசி-ன்னு ஒண்ணு இருப்பதே தெரியாது..பாஸ்மதி அரிசி மட்டும்தான் தெரியும்.

வட இந்தியர்கள்னு இல்லை, என் கர்நாடகா பிரெண்ட் ஒருத்தங்க(நம்ம ஊர்தான்..ஆனா பிறந்து வளர்ந்தது வேற மாநிலம்)..கல்யாணமாகி அஞ்சாறு வருஷமா இட்லி செஞ்சதே இல்லையாம்..எப்படி செய்யறதுன்னு தெரியலையாம் அவங்களுக்கு..(என்ன கொடும சரவணா இது??)

இன்னொரு தோழிக்கு மாவு சரியா பொங்கியிருக்கா இல்லையான்னு கூட கண்டுபிடிக்கத் தெரியாது..புளிக்காத மாவில் இட்லி ஊத்தி அணுகுண்டு ரேஞ்சுல இருக்கும் அவங்க வீட்டு இட்லி.

சரி..இணையத்துல தேடுவோம்னு பாத்தா...

இட்லிக்கு தனியா, தோசைக்கு தனியா மாவு அரைக்கணும்..தோசை முருகலா வர மாவுல சர்க்கரை சேர்க்கணும்..கடலைப்பருப்பு சேர்த்து அரைக்கணும்..ரவை சேர்த்து கலக்கணும்..பச்சரிசி -புழுங்கலரிசி சேர்த்து அரைக்கணும். உளுந்தை ஐஸ் வாட்டர்ல அரைக்கணும்..ஊறவைக்கும் போது பிரிட்ஜ்ல வைக்கணும்.. எக்ஸட்ரா..எக்ஸட்ரா....எக்ஸட்ரா!

அப்பப்பா..ஒரே டிப்ஸ் மழையா இருந்தது..மாவு அரைக்கறதே பெரிய வேலை போல!!!!

இப்படி பல்வேறு அனுபவங்கள் கொடுத்த தைரியத்துல தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன். என் கணவருக்கு டெய்லி இட்லி-தோசை குடுத்தாலும் சந்தோஷமா சாப்பிடுவார்..ஊர்ல மாமியார் வீட்டுல பிரிட்ஜ்ல மாவு எப்பவும் இருந்துட்டே இருக்கும்.

புழுங்கல் அரிசி தான் நாங்க யூஸ் பண்ணறோம்..அதனால தனியா இட்லி அரிசி-ன்னு வாங்கறதில்ல.. 4:1 ரேஷியோலதான் நான் மாவரைக்கறது..நாலு கப் அரிசி, ஒரு ஸ்பூன் வெந்தயம், ரெண்டு கைப்பிடி அவல் எல்லாவற்றையும் சுத்தமா களைந்து நாலஞ்சு மணி நேரம் ஊறவைத்துடுவேன். (ஒரொரு நாள், வெந்தயம் போட மறந்தும் போயிடுவேன்..இல்ல அவல் தீர்ந்து போயிருக்கும்..ஸோ, இந்த ரெண்டும் போட்டே ஆகணும்னு கட்டாயம் இல்லை.)ஒரு கப் உளுந்தை மாவு அரைப்பதற்கு ஒண்ணு-ஒண்ணரை மணி நேரம் முன்னால நல்லா அலசி ஊற வைப்பேன்.

அரைக்கும்போது, அரிசிய கிரைண்டர்ல போடும்போதே போதுமான தண்ணீர் ஊத்திடணும்.அப்போதான் மோட்டாருக்கு அதிக வேலை இல்லாம ஈசியா அரிசி அரைபடும்.ஆனா உளுந்து அரைக்கும் போது முதல் அஞ்சு நிமிஷம் தண்ணியே ஊத்தக்கூடாது..ஏன்னா, தண்ணி அதிகமான உளுந்து சரியா அரைபடாதாம்..அதுக்கப்புறம் கொஞ்ச நேரத்துக்கொருமுறை தண்ணி தெளிச்சு அரைக்கணுமாம்.(இது எங்க வீட்டு லக்ஷ்மி வெட் கிரைண்டர் கூட வந்த டிப்ஸ்..உபயோகமான டிப்சாத்தான் தெரியுது. இந்த டிப்ஸ்-ஐ நான் ஆறு மாதம் கழிச்சுதான் பாத்தேன்..அது வேற கதை :) )

ஸோ, டிப்ஸ்-ஐ பாலோ பண்ணி அரிசி மாவு அரைக்கோணும்..உணர்ச்சி வசப்பட்டு அரிசிய கிரைண்டர்ல போடும்போதே ஒரு லிட்டர் தண்ணிய ஊத்திடாதீங்க..கொஞ்சம் அளவு பாத்து ஊத்தி அரையுங்க.

மாவு ரொம்ப நைசா இருக்கணும்னு அவசியமில்ல.( டீவி, கீவி பாத்துட்டு, இல்ல மடிக்கணினில மூழ்கி மறந்து போயி உட்டுட்டீங்கன்ன பரவால்ல..கொஞ்சம் நெகு-நெகு ன்னு அரைபட்டுடும்..பட், இட்ஸ் ஓகே!) இல்ல, ஒருவேளை டைம் ரொம்ப கம்மியா இருக்கு..அபார்ட்மென்ட்ல நைட் பத்து மணிக்கு மேல சத்தம் வரக்கூடாதுங்கற ரூல்ஸ்-ஐ வயலேட் பண்ணக் கூடாது, சீக்கிரமா அரைச்சு முடிக்கணும்னு இருந்தா கொஞ்சம் முன்னாலேயே கூட எடுத்துடுங்க..தட் இஸ் ஆல்ஸோ ஓகே!)

அப்புறம் என்ன...உளுந்தை அரைக்க வேண்டியதுதான்..டிப்ஸ்-ஐ பாலோ பண்ணி கொஞ்ச நேரத்துக்கு ஒரு முறை குளிர்ந்த நீர் தெளித்து அரையுங்க..தண்ணி ஊத்தி ஊத்தி அரைக்கும் போது மாவு நல்லா பொங்கி வரததைப் பாக்கும்போது உங்களுக்கே ஒரு சந்தோஷமா இருக்கும்.(ஹி,ஹி!!)

இப்போ அரிசி மாவு, உளுந்து மாவு, தேவையான உப்பு எல்லாம் சேர்த்து நல்லா கலக்கி வையுங்க..கிரைண்டர்ல இருக்க மிச்சம் மீதி மாவு வேஸ்ட் ஆனா பரவால்ல. நான் சிக்கன சிகாமணியாக்கும்னு கிரைண்டர்ல தண்ணி ஊத்தி கழுவி, அந்த தண்ணிய மாவோட சேர்த்து கலக்கிடாதீங்க..மாவு கெட்டியா இருந்தா இட்லி/தோசை ஊத்தும்போது தேவைப்பட்டா தண்ணி ஊத்தி கலக்குங்க..இப்ப வேணாம்,சரியா?

அடுத்து கிரிட்டிகலான டெக்னிகல் விஷயம் ..மாவை புளிக்க வைக்கணும்..பொதுவா யு.எஸ்.ல சம்மர் சீசன்ல மாவு சாதாரணமா வெளில( வீட்டுக்கு வெளியே இல்ல..வீட்டுக்குள்ள..ஆனா அவன்,பிரிட்ஜ் இதெல்லாத்துக்கும் வெளியே) வைச்சாலே பொங்கிடும்..நைட் மாவு அரைச்சு காலைல 'பூ போல இட்லி -புதினா சட்னி 'சாப்பிடலாம்.

ஆனா என்ன பிரச்சனைன்னா இங்கே அந்த சம்மர் சீசனே மேக்சிமம் நாலு மாசம் தான்..மீதி எட்டு மாசம் மாவு சாதாரணமா பொங்காது. அதுக்காக நம்ம பேவரிட் ப்ரேக் பாஸ்ட்-ஐ மிஸ் பண்ண முடியுமா என்ன?

கன்வென்ஷனல் அவன்-னு ஒண்ணு நம்ம அடுப்புக்கு கீழே இருக்கே..அதை ஒரு நாலஞ்சு நிமிஷம் ஆன் பண்ணி வைங்க..அப்புறம் மாவை அதுக்குள்ள வைச்சு மூடி வைச்சுடுங்க. மாவு பொங்கிடுச்சான்னு,அப்பப்ப அவன் டோர்-ஐத் திறந்து பாக்கக் கூடாது. ஆண்டவனை வேண்டிகிட்டு உள்ளே வைச்சு மூடி வைங்க..எல்லாம் அவன் (இது, கன்வென்ஷனல் அவன் இல்ல,ஆண்டவன்..ஹி,ஹி! ) பாத்துக்குவான்.

இன்னொரு மேட்டர் என்னன்னா, கன்வென்ஷனல் அவன்-ல பிளாஸ்டிக் பாத்திரத்த வைக்கக் கூடாது.. பொதுவாவே, எல்லா சீசன்லையும் மாவு எவர் சில்வர் பாத்திரத்தில வைச்சா நல்லா பொங்கும். அவன்- வைக்கும்போதும் பயமில்லாம வைக்கலாம்.

சில புத்திசாலிகள்(யாருன்னு கிரிடிகல் கேள்வியெல்லாம் கேக்கக் கூடாது) மாவு பாத்திரத்த அவன்ல வைச்சே ஆன் பண்ணுவாங்க, அஞ்சு நிமிஷத்தில ஆப் பண்ணிடுவோம்ங்கர நம்பிக்கைல..ஆனா மறந்து போயி பக்கத்து வீட்டுக்கு போயி அரட்டை அடிக்க ஆரம்பிச்சுடுவாங்க..அரை மணி நேரம் கழிச்சு ஓடோடி வந்து ஆப் பண்ணுவாங்க..அவன் டெம்பரேச்சர் குறைவா இருந்திருந்தா நீங்க பிழைச்சீங்க..இல்ல, பேக்ட் இட்லிதான்!! கவனமா இருங்க.


ஓகே..இப்போ மாவரைச்சாச்சு..பொங்கவும் வைச்சாச்சு..அடுத்து இட்லி ஊத்துவோமா?


பதிவு அனகோண்டா மாதிரி நீளமா போவதால்..அடுத்த பதிவுல இட்லி சுட்டு, தோசையும் ஊத்திடலாம்..என்ன சொல்றீங்க?
--தொடரும்

LinkWithin

Related Posts with Thumbnails