Friday, December 31, 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வரும் ஆண்டு அனைவருக்கும் நல்லதொரு ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்!

எங்க வீட்டிலிருந்து அனைவருக்கும் க்றிஸ்மஸ் அன்ட் நியூஇயர் ட்ரீட்,லெமன் கேக்!
Wish You All a Very Happy New Year!

மலரும் 2011 அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாய் மலர வாழ்த்துக்கள்!

Tuesday, December 28, 2010

கார்ன் ஃப்ளேக்ஸ்-க்ரெய்சின் குக்கீஸ்

காலை உணவுக்கு இட்லி-தோசை இவற்றுக்குத்தான் முன்னுரிமை என்றாலும் எப்பவாவது ஸ்னாக்-ஆக சாப்பிடவென்று கார்ன் ஃப்ளேக்ஸ் எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கொஞ்ச நாட்களுக்கு முன்பு கெலாக்ஸ் கார்ன் ஃப்ளேக்ஸ்-லிருந்து உலர் பழங்களை அறிமுகப்படுத்தினார்கள். கார்ன் ப்ளேக்ஸ் உடன் இன்ட்ரொடக்ஷன் ஆஃபராக குட்டிக்குட்டி பேக்கில் க்ரெய்சின்(உலர்ந்த க்ரான்பெரி பழங்கள்) வந்தன..பேக்கிலேயே அவற்றை உபயோகித்து ஒரு குக்கீ ரெசிப்பியும் இருந்தது.

ஒரு க்ரெய்சின் பேக் வந்ததுமே 'துறு துறு'ன்ன என் கை இரண்டாவது முறையும் அதே பழங்கள் வந்ததும் கம்முன்னு இருக்குமா? :) செய்து பார்த்துடலாம்னு களமிறங்கிட்டேன். ரெசிப்பியில் இருந்த அதே அளவுகள்,செய்முறை..வால்நட் மட்டும் கைவசம் இல்லாததால் சேர்க்கவில்லை. குக்கீஸ் மிகவும் நன்றாக இருந்தது.

தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர்-1கப்
பேக்கிங் பவுடர்-1/2டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1/2டீஸ்பூன்
உப்பு-1/4டீஸ்பூன்
சர்க்கரை-1/2கப்
(அறை வெப்பநிலையில்)வெண்ணை-1/3கப்
(அறை வெப்பநிலையில்)முட்டை-1
பால்-5டீஸ்பூன்
வெனிலா எஸன்ஸ்-1/2டீஸ்பூன்
கார்ன் ஃப்ளேக்ஸ் சீரியல்- 2 2/3கப்

செய்முறை
கார்ன் ஃப்ளேக்ஸை ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும்.
மாவு,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு இவற்றை விஸ்கால் நன்றாக கலந்து வைக்கவும்.
ஒரு மிக்ஸிங் பவுலில் வெண்ணை-சர்க்கரை இவற்றை கலக்கவும்.சர்க்கரை கரையும் வரை கலக்கி, அத்துடன் முட்டை-பால்-வெனிலா எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.
கலவை நன்றாக fluffy-ஆக வரும்வரை கலந்த பின் மாவு-பேக்கிங் பவுடர்-சோடா-உப்பு கலவையை சேர்த்து கலக்கவும்.
இறுதியாக உலர் பழங்களை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
குக்கீ கலவையிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து பொடித்த கார்ன் ஃப்ளேக்ஸில் நன்றாகப் புரட்டி பேக்கிங் ட்ரேயில் போதுமான இடைவெளி விட்டு அடுக்கவும்.
375F ப்ரீஹீட் செய்த அவன்-ல் சுமார் 12 நிமிடங்கள் பேக் செய்து குக்கீ-க்களை நன்றாக ஆறவைக்கவும்.
ஸ்டெப்-பை-ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பியை காண இங்கே க்ளிக் பண்ணுங்க!

//
ஹாய் மகி எப்படி இருக்கிங்க.இந்த ரெசிப்பி பார்க்க ரொம்ப நல்லா இருக்கு..இந்த ரெசிப்பிய தமிழிலும் போடுங்களேன்//என்று சபீக்கா கேட்டிருந்தாங்க..அடுத்த வாரம் போடுகிறேன்னு சொல்லி,சொல்லி,சொல்லி.....ஒருவழியா இந்த வருஷமே(!!) போஸ்ட் பண்ணிட்டேன். :)
***********
Dry குலாப் ஜாமூன் ரெசிப்பியை அகிலாவின் "Dish Name Starts With D"ஈவன்ட்டுக்கு அனுப்புகிறேன்.


Friday, December 24, 2010

பாடல்கள் தொகுப்பு-2

எனக்குப் பிடித்த பாடல்களின் இன்னொரு தொகுப்பு...வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பெல்லாம் இல்லை. பாசம்,பொஸஸிவ்னெஸ்,சந்தோஷம்,துக்கம்,காதல் இப்படிப் பல்வேறு உணர்ச்சிகளின் கலவையான கதம்பமாய் இந்தத் தொகுப்பு.

இதில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காரணத்துக்காய் பிடிக்கும்..சில பாடல்களில் இசை,சில பாடல்களில் கவிதைவரிகள்,சிலவற்றில் நடிகை,ஒரு சிலதில் பாடகி இப்படி..ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாய் அழகு!

இரு கோடுகள் மட்டும் வீடியோ லிங்க் கிடைக்காததால் ராகா.காமின் லிங்க் கொடுத்திருக்கேன்..அங்கே சென்று பாடலை செலக்ட் செய்து கேட்கலாம்.கேட்டுப் பாருங்க..

புன்னகை மன்னன்,பூவிழிக் கண்ணன்..-இரு கோடுகள்
ஜெயந்தி,சௌகார் ஜானகி இருவரின் நடிப்பும்,பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி இருவரின் குரலும் மிகவும் அருமையாக இருக்கும் இந்தப் பாடலில்.


காற்றுக்கென்ன வேலி,கடலுக்கென்ன மூடி?..-அவர்கள்
இந்தப் பாடல் கேட்கும் பொழுது நானே காற்றில் பறக்கிற மாதிரி,'விட்டு விடுதலையான சிட்டுக்குருவி'யைப் போல ஒரு விடுதலை உணர்ச்சி வரும்.


பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. -நீங்கள் கேட்டவை
என் அக்காவுக்கு 2 பையன்கள். இருவரும் கொஞ்சம் மாநிறம்..அதனால், 'பிள்ளை நிலா,இரண்டும் கருப்பு நிலா' என்று பாடி கிண்டல் செய்வோம்..நாட்கள் ஓடினதே தெரியவில்லை,இப்பொழுது பெரியநிலா 10த் எக்ஸாம் எழுதப் போகிறான்.:)


மண்ணில் வந்த நிலவே..-நிலவே மலரே


ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க..-முதல் மரியாதை


ஆடியிலே சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு ...-என் ஆசை மச்சான்
ஒரு கிராமத்துக்கே போய்விட்டு வந்த மாதிரி இருக்கும் இந்தப் பாடல்..ரேவதியின் நடனம் மிகவும் நல்லா இருக்கும்.


எழுதுகிறேன் ஒரு கடிதம்..-கல்கி
இந்தப் பாடல் கேட்கும் பொழுதெல்லாம் என் கண்ணோரம் வரும் நீர்த்துளிகள் தவிர்க்க முடியாத நிகழ்வு! கீதாவின் முகபாவனைகள் பிரமாதமாய் இருக்கும்..அனுராதா ஸ்ரீராம்-சித்ராவின் குரல்களும் அருமையாக இருக்கும்.


சினேகிதனே,சினேகிதனே..-அலைபாயுதே


மனம் விரும்புதே உன்னை..-நேருக்கு நேர்


உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு?-அமர்க்களம்
இந்தப் பாடலில் வீட்டில் யாருக்கும் தெரியாமல்,ஷாலினியின் கண்ணுக்கு மட்டும் தெரியும் அஜீத், அந்தக் கற்பனை மிகவும் பிடித்தது. :)

******
கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
Wish you a Merry Xmas!

Wednesday, December 22, 2010

டாய் ஸ்டோரி

ஹாய்,ஹாய்,ஹாய்!! புதிய பதிவைப் பார்த்ததும் ஆவலாய் ஓடிவந்து படிக்கும் வாசக நேயர்களுக்கு எங்களின் அன்பான வணக்கம்!

அப்புச்சி(grandpa),குட்டி(kutti),மோக்லி(mougli), அப்பு(appu),டெட்(ted),ட்வீட்டி(tweetty),
க்ரி
ஸ்லி(grizzly), நாங்க எல்லாரும் மகிஅக்கா வீட்டுல இருக்கோம். (போட்டோல லெஃப்ட் டு ரைட் பாருங்க).

2 வருஷத்துக்கும் மேல அக்காகூடவே இருக்கறதால எங்களுக்கும் ப்ளாகில் எழுதும் பைத்தியம் தொத்திகிச்சு. அக்கா எங்கே போயிட்டாங்கன்னு கேக்கறீங்களா? ஷீ இஸ் பிஸி இன் கிச்சன்..அவிங்க வரதுக்குள்ள நைஸா ஓடியாந்திருக்கோம். :)


விஷயம் என்னான்னா காயத்ரி அக்காவும்,அகிலா அக்காவும் மகி அக்காவ ஒரு தொடர்பதிவு எழுதச்சொல்லிருக்காங்க. உங்களுக்கே தெரியும்,அக்கா கொஞ்சம் கூச்ச சுபாவின்னு.அதனால அக்காவைப் பத்தி சொல்ல நாங்க வந்திருக்கோம். காயத்ரி அக்கா என்ன சொல்லிருக்காங்கன்னா,மகி அக்காவைப் பத்தி 7 விஷயம் சொல்லணுமாம்.காதை கொஞ்சம் தீட்டிகிட்டு கேளுங்க! :)

Ted:மகி அக்கா ரெம்ப நல்லவங்க,வல்லவிங்க! (வல்லவி=வல்லவனுக்கு பெண்பால்)
அப்பு:மகி அக்கா ரெம்ப அழகா(!!) இருப்பாங்க!
அப்புச்சி:மகி இயற்கைய ரொம்ப அழகா வர்ணிக்கும்!
குட்டி:மகி அக்கா சமையல்ல பலசமயம் புலி,சில சமயம் எலி! ஹிஹி!
க்ரிஸ்லி:மகி அக்கா போட்டோ எடுக்கறதுல எப்பவுமே புலி!
மோக்லி:மகி அக்கா ஒரு மல்ட்டிபிள் பர்சனாலிட்டி..அவிங்க எழுதறதைப் பாத்து,நேர்லயும் இப்படிதான் பேசுவாங்கன்னு கற்பனை பண்ணிருந்தீங்கன்னா,நீங்க ரெம்ப பாவம்! எழுதும்போது மட்டும்,அவங்க மனதில் ஒரு ஓரமா தூங்கிட்டு இருக்க ஸ்ப்ளிட் பர்ஸனாலிட்டி சுறுசுறுப்பா எழுதும். மத்த டைமெல்லாம் அக்கா ரெம்ப அமைதி!
ட்வீட்டி:மகி அக்காக்கு மஞ்சக்கலர் புடிக்கும்,நத்தை,பறக்கிற குருவி இதெல்லாம் ரசிக்கற அழகான ரசனை இருக்குது.

அடுத்து அகிலாக்கா கொஸ்டீன்ஸ் குடுத்து ஆன்ஸர்ஸ் கேக்கிறாங்கோ.அதெல்லாம் பார்த்தா எக்ஸாம் எழுதற எபெக்ட் வருதா,ஸோ யாரையாச்சும் பாத்து காப்பி அடிச்சுடலாம்ணு நாங்கள்லாம் ப்ளான் பண்ணம். இங்கே அக்காவே கொஞ்சம் கொஸ்டின்ஸுக்கு ஆன்ஸர் பண்ணிருந்தாங்கோ..அதையும் காப்பி அடிச்சி,அவிங்க மெய்ல் பாக்ஸ்ல ட்ராப்ட்-ல வச்சிருந்த மீதி ஆன்ஸர்ஸும் காப்பி அடிச்சி இங்கே பேஸ்ட் பண்ணிட்டம்.:)

1. Are you a vegetarian or have you thought of being one?
In-spite of Born, brought-up and married in a non-vegetarian family, I am an egg eating Vegetarian.

2. Who inspired you to cook?
I started to cook all 3 meals by myself only after the marriage. Hunger was the inspiration to cook! haahaa!!! Okay,don't get tensed! My mom,m-in-law and my beloved hubby are my initial inspirations,and then the inspiration list expanded with my friends and Internet.

3. How do you celebrate Christmas or a favourite festival of your choice?
We don't do much on Christmas day..Once we forgot to buy milk, and somehow managed to get it in a gas station. Its an unforgettable experience about Christmas!:)
My favourite festival is Diwali..I would love to celebrate it with everybody in my family. Of course with lot of fireworks and sweets.

4.Do you prefer to celebrate New Year's Eve with friends and/or family to ring in the New Year quietly and privately at home?
Back home,New Years were quite and private..I always get a new dress for the new year. Since it comes in between the month of Markazhi, I used to go to the temple early in the morning...those are good old days!! Now we are going to see fireworks and having get-to-gathers with the friends around.

5.If someone were to ask you to bring a dessert to a party,what would you bring? Store-bought or home made?If you were to make at home,what would you make?
I never liked the store bought (Indian) desserts here,so will make it at home only..the choices will be gulab-jamoon,kesari,ras malai,or some cakes.

6.How will you celebrate your next birthday?
Haven't thought about it yet! Like last year it will be quite and private.:) We will go to the temple and have dinner outside.

7.Do you have a New Year resolution and will you be sticking to it?
Nope..I haven't had any resolutions so far.Its better not to take it than brake it.

இவ்ளோதாங்க டைப் பண்ணி வச்சிருந்தாங்கோ.ஆன்ஸர்ஸ் எல்லாம் எப்பூடி இருக்கு? சூப்பரா இருக்குல்ல? மகி அக்கா ஆல்வேஸ் ராக்ஸ்,யூ நோ??

இவ்ளோ நேரமா போராடி(!!) அக்கா பண்ணிய குக்கீ!! எல்லாரும்*** சுத்தி,கடப்பாரை,வெடிமருந்து இதெல்லாம் ரெடியா எடுத்துட்டு பிஸ்கட் சாப்புட வாங்கோஓஓஓஓ! :) :) :)))))

மகி அக்கா கொடுமை போதாதுன்னு இப்ப எங்க கொடுமையையும் பொறுமையா படிச்சதுக்கு டாங்க்ஸ்!

ஜெய்லானி
அண்ணா

அப்பாவி தங்கமணியக்கா
என்றென்றும் 16-பானுஅக்கா
பாலாஜி சரவணன் அண்ணா
வானதியக்கா
சிவா அண்ணா
ஜலீலா ஆன்டி
ஸாதிகா ஆன்டி
(ஆன்டீஸ்,கோபப்படாதீங்க,நீங்க மகியக்காவுக்குதான் அக்கா,எங்களுக்கு ஆன்ட்டி!ஹிஹி)
இவங்களை எல்லாம் இந்தப் பதிவைத் தொடருமாறு அன்போடு கேட்டுக்கொண்டு,அட்வான்ஸா இந்த அவார்டையும் வழங்கிவிட்டு விடைபெறுகிறோம்.
இப்ப நம்மள்லாம் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டமல்ல?உங்கள விட்டுட்டு எங்களால இருக்க முடியாது,இனிமேல் நாங்க அடிக்கடி வருவோம்,(ஜாக்கிரதை!) நன்றி!
_()_ _()_ _()_

**** அந்த இடத்தில கொஞ்சம் ஸ்பேஸ் வெள்ளையா இருக்கும்,அதை ஹைலைட் பண்ணிப் படியுங்கோ. ஜெய் அண்ணாவோட கழுக்குக்கண்ணுக்கே இது தெரிலன்னா,வேற யாருக்குமே தெரியாது,அதனாலே சஸ்பென்ஸை உடைச்சாச்ச்ச்ச்ச்ச்ச்! :)

Friday, December 17, 2010

ஸின் சிட்டி-நிறைவுப்பகுதி

ஸின் சிட்டி-பகுதி 1
ஸின் சிட்டி-பகுதி 2
லாஸ் வேகாஸ் கேஸினோக்களில் ப்ரேக்ஃபாஸ்ட்-லன்ச்-டின்னர்/ ஆல் டே பஃபேக்கள் மிகவும் பிரபலம்.இந்தப் பதிவில் நாம் பார்க்கபோவது ப்ளானட் ஹாலிவுட்& சர்க்கஸ் சர்க்கஸ் கேஸினோக்களின் பஃபேக்களைப் பற்றி.

வேகாஸின் டாப்10 பஃபேக்கள்-ல இருக்கு, என்னவரும் முன்பு ஒருமுறை இங்கே சாப்பிட்டிருக்கார், ரொம்ப சூப்பரா இருக்கும்னு ரிவ்யூவும் போட்டிருக்காங்க என்று பல்வேறு காரணங்களால் "ப்ளானட் ஹாலிவுட்"-இன் ஸ்பைஸ் மார்க்கெட் பஃபே-வை செலக்ட் பண்ணினோம். பார்க்கிங்லாட்ல காரைப் பார்க் பண்ணிட்டு,உள்ளே நுழைந்ததும்,கண்ணில் படுவது..
உலகம் முழுக்க இருக்கும் பெரும்பாலான மொழிகள்ல "வணக்கம்"னு எழுதி நம்மை வரவேற்கிறாங்க!! நானும் இன்னும் சில தமிழர்களும் இந்த வார்த்தைகளுக்குள் தேடிப் பிடிச்சு 2-3 இடத்தில இருந்த 'வணக்கத்தை' கண்டுபிடிச்சுட்டோம். சம்பந்தமே இல்லாத இடத்துல தமிழைப் பாத்ததும் ஒரு சிலிர்ப்பு,சந்தோஷம்!!
நாங்க நுழைந்த இடத்திலிருந்து ஒரு பெரிய வட்டம் சுற்றி நடந்துதான் பஃபேக்கு போகணும்.போகும் வழி "மிராக்கிள் மைல் ஷாப்ஸ்" என்ற ஷாப்பிங் மால். உள்ளே அவ்வளவு தத்ரூபமா ஒரு பெரிய டோம்(dome)-இன் கூரை முழுக்க வானத்தைப் போல(விசய் காந்த் படமில்ல,நிஜ வானம்!ஹிஹி) பெய்ன்ட் பண்ணி வச்சிருக்காங்க. நீலவானம்,மேகங்கள், நட்சத்திரங்கள்,அங்கங்கே பறக்கும் விமானங்கள்,சூரிய ஒளி வருவது போல லைட்டிங் இப்படி ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருந்தாங்க.
காலை 10மணிக்கு அங்கே போனோம்,கொஞ்சம் உள்ளே நடந்ததும்,சுற்றுப்புறம் ஏதோ இரவு 10 மணி போல ஆகியிருந்தது.எல்லா இடத்திலும் செயற்கை இருட்டு,அதற்கேற்ப அலங்கார விளக்குகள்,பல்வேறு கடைகள்,என்டர்டெய்ன்மெண்ட் தியேட்டர்கள் இப்படி ஒரு பெரிய வட்டத்தை சுற்றியடித்து ஒரு வழியா ஸ்பைஸ் மார்க்கெட்டை கண்டுபிடிச்சோம்.

அரை மணி நேரன் கியூல வெயிட் பண்ணி கவுன்ட்டர்ல 2 பேருக்கும் பே பண்ணிட்டு மறுபடி(யும்) வெயிட்டிங். 5 நிமிடங்களில் ஒரு அம்மணி வந்து எவ்வளவு பேர்? என்று கேட்டு,டேபிளைக் காட்டினார்.அமெரிக்கன்,ஆசியன்,இட்டாலியன்,மிடில்-ஈஸ்டர்ன்,மெக்ஸிகன், சாலட் &சூப் பார், டிஸர்ட் என்று படு பிரம்மாண்டமா இருந்ததுங்க பஃபே.

சரி இனி பூந்து விளையாட வேண்டியதுதான்னு எழுந்து போனா...அங்கேதான் எனக்கு ஆப்பு!!! :-| இருந்த அத்தனை உணவில் ஒன்று கூட எனக்குப் பிடிக்கல..பம்கின் சூப் மட்டும் கொஞ்சம் குடிக்கிறமாதிரி இருந்தது. டிஸர்ட்டாவது கொஞ்சம் சாப்புடற மாதிரி இருக்குமான்னு பார்த்தா...அங்கேயும் ஏமாற்றம்! இந்த போட்டோவைப் பாருங்களேன்,,அழகா இருக்குன்னு போட்டோ மட்டும் எடுத்துட்டு வந்தேன்.

இந்தப் பதிவு முழுக்க முழுக்க என் சொந்த அனுபவம்.மொத்தத்தில் இது ஒரு சொ(நொ)ந்த கதைங்கோ!!!!!!!! :) அதனால் என் பதிவைக் கொண்டு ப்ளானட் ஹாலிவுட்டின் "ஸ்பைஸ் மார்க்கெட் பஃபே" பற்றி எந்த முடிவுக்கும் வரவேண்டாம். உணவுகள் எல்லாமே என்னவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. வேகாஸின் டாப்10 பஃபேக்களில் முதலிடத்தில் இல்லன்னாலும், முதல் 10 இடங்களுக்குள்தான் அது இருக்கிறது.ஸோ,இட்ஸ் வொர்த் எ ரிஸ்க்! இதனைப் பற்றிய மேலதிக தகவலுக்கு இதோ இங்கே க்ளிக்குங்க.

அடுத்த நாள் சர்க்கஸ்-சர்க்கஸ் கேஸினோல ப்ரேக்ஃபாஸ்ட் பஃபே போனோம். அங்கே எடுத்ததுதான் இந்தப் படம். கேரட் கேக்,க்யூட்டா இருக்கில்ல? ப்ளானட் ஹாலிவுட்-உடன் கம்பேர் பண்ணினா,இங்கே உணவுவகைகள் சாய்ஸ் குறைவு..சர்வீஸும் அந்த அளவுக்கு [கவனிங்க,கம்பேர் பண்ணினாதான்..இல்லைன்னா சர்க்கஸ் சர்க்கஸும் நல்லாத்தான் இருக்கும்.:) ]சரியில்லைன்னுதான் சொல்லணும்.

அங்கே போவதன் மெய்ன் ரீசன் என்னன்னா...என்னுடைய பேவரிட் கோக்கனட் மக்கரூன்!!! :) சூஊஊஊ....ப்பரா இருக்கும்,வேகாஸ் போனா மிஸ் பண்ணிடாதீங்க இதை.

மற்றபடி 2 கேஸினோக்கள்லயும் குழந்தைகளுக்கு நிறைய விளையாட்டுகள் இருந்தது. ப்ளானட் ஹாலிவுட்-ல 2 பேரை சேர்களில் உட்கார வைத்து சூட்கேஸ் மூடுவது போல லாக் பண்ணிடறாங்க.. உள்ளே ஒரு குட்டி டிவி இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் அந்த சூட்கேஸை(!!) 360டிகிரி கோணத்திலேயும் சுத்தறாங்க ஒரு 5 நிமிடம்..எனக்கு அதை வேடிக்கை பார்த்த்துலேயே போதும் போதும்னு ஆகிட்டது!! :) சர்க்கஸ்-சர்க்கஸில் குட்டீஸை கவரும் நிறைய விளையாட்டுகள் இருக்கு..அப்பப்ப சர்க்கஸ் நிகழ்ச்சியும் நடக்குது. குட்டீஸ் ரொம்ப என்ஜாய் பண்ணுவாங்க இங்கே போனா! மிராக்கிள் மைல்ஸ் ஷாப்ஸையும் மிஸ் பண்ணாம பாருங்க.

இன்னும் பல கேஸினோக்கள் மீதியிருக்கிறது..அடுத்த முறை சென்றுவந்தபின்னர் தொடர்கிறேன். இந்த 3 பகுதிகளையும் ஆர்வமாய்ப் படித்துக் கருத்துக்கூறி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

-முற்றும்

Tuesday, December 14, 2010

மயக்கும் இயற்கை!

இயற்கை..எழுத்துக்களில் அடக்க முடியாத ஒரு பிரம்மாண்டம்! ஒரு நாள்,ஒரு நிமிடம் பார்த்த காட்சிகளை அடுத்த நாள்,இல்லையில்லை அடுத்த நொடி காணமுடிவதில்லை..பூ நிறம் மாறி வேறொரு ஆளாக நின்றிருக்கும்..அல்லது உடலெல்லாம் சிவப்பு நிற இலைகளுடன் நின்ற மரத்திற்கு காற்று இலவசமாய் மொட்டை அடித்திருக்கும்.

வானில் நொடிக்கொரு முறை புது வடிவமெடுக்கும் மேகங்களையும், தினமும் நிகழ்வதாய் இருந்தாலும் கண்ணில் படும் அந்திநேர மஞ்சள் வானத்தையும் பார்க்கும்போதெல்லாம் கடவுளின் மீது நம்பிக்கை வருகிறது!

கடந்த சனிக்கிழமை நிஜமாகவே ஒரு 'பொன் மாலைப் பொழுது'! சூரியன் மறைந்து இருள் சூழும் வரையில் வேறெந்த எண்ணமும் இல்லாமல் வானமகளை ரசித்தபடியே இருந்த ஒரு அழகான மாலைப்பொழுது அது!
நாங்கள் கண்டு ரசித்த காட்சிகள், நினைவுப் பதிவுகளாய்..இதோ இங்கே!
~~~~~
இங்கே சிலநாட்கள் தொடர்மழையாய் இருந்தது..அதன் விளைவாக பூமிக்குள் தூங்கிக்கொண்டிருந்த பல மலர்ச்செடிகள் உற்சாகமாகத் துளிர்த்து, அழகழகாய்ப் பூத்திருக்கின்றன.சாலையோரம் இருக்கும் இந்தச் செடிகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவைதான் என்று நினைக்கிறேன்,ஆனால்...இந்தப் படங்களைப் பாருங்கள்..இறைவன் படைப்பில் எத்தனை எத்தனை விதம்??!!

ஒரு செடியில், பூ முழுதும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்,இன்னொன்றில் மஞ்சளில் ப்ரவுன் நிறத்தீற்றல்களுடன் பூத்திருக்கும்..சில பூக்களில் மஞ்சள் நிறத்தை டாமினேட் செய்து ப்ரவுன் நிறம் ஆதிக்கம் செலுத்தும்.சில பூக்களில் ஒவ்வொரு இதழிலும் கவனமாக ஒரே இடத்தில் கருப்புப் புள்ளிகள் இருக்கும்...

கேமரா இல்லாமல் சென்ற ஒரு நாளில்,உயரமான ஓரிடத்தில் இதே பூக்கள் கிட்டத்தட்ட சிவப்பு நிறத்தில் இருந்தன.இந்த ஆராய்ச்சியின் முடிவாக வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து மலர்கள் நிறங்கள் மாறுகின்றன என்ற கணிப்புக்கு வந்திருக்கிறேன். :)

இந்தமுறை பூக்களிலெல்லாம் பெரும்பாலும் வண்டுகளின் ரீங்காரம். வண்டுகள் கேமராவில்தான் சிக்க மறுத்தன..இந்தப்பூவில் இருக்கிறது என்று ஃபோகஸ் செய்வேன்,க்ளிக் பண்ணும் நொடியில் வேறு பூவுக்குப் பறந்துவிடும்..பலமுறை போராடிப் பார்த்து விட்டுவிட்டேன்.வீடு சேர்ந்து போட்டோக்களை லேப்டாப்புக்கு மாற்றுகையில் என்னவர்தான் கவனித்தார்..இரண்டு படங்களில் வண்டுகள் மாட்டியிருந்தன.
எத்தனை முறை படமெடுத்தாலும், மலர்களை மட்டும் சலிக்காமல் கேமராவில் சிறைபிடித்துக்கொண்டே இருக்கிறேன்!
இன்னும் மலர்கள் இங்கே!

Friday, December 10, 2010

பைனாப்பிள் சேமியா கேசரி,பல்பு & விருது

பிஸ்ஸா செய்வதற்காக வாங்கிய ஒரு கேன்ட் பைனாப்பிள் துண்டுகளில் மீதி, ப்ரிட்ஜில் வெகு நாட்களாக உட்கார்ந்துகொண்டு,'என்னை ஏதாவது செய்யேன்!'ன்னு கெஞ்சிட்டு இருந்துதுங்க. மேனகா ப்ளாகில் பைனாப்பிள் கேசரியைப் பார்த்ததுமே இதை ட்ரை பண்ணிப்பார்க்கணும்னு மனசுக்குள்ளே குறிச்சு வைச்சிருந்தேனா..ஒரு நாள்,பத்தரை-பனிரெண்டு ராகுகாலத்துல, செய்ய ஆரம்பிச்சேன்.:)

ஒரு ஸ்பூன் பட்டர்ல(கைவசம் நெய் இல்ல) முந்திரி,திராட்சை,பைனாப்பிள் துண்டுகளை வதக்கி எடுத்து வச்சுட்டு..
அதே கடாயில் 3/4 சேமியாவும், 11/2கப் கொதிநீரும்,2 துளிகள் மஞ்சள் ஃபுட் கலரும் ஊற்றி சேமியாவை வேகவைச்சேன்.(சேமியாவை வறுக்க வேணாமான்னு கேப்பீங்க..நாங்கள்லாம் மொத்தமா சேமியாவ வறுத்து ஸ்டோர் பண்ணி வச்சுக்கறது வழக்கம். அப்படி இல்லைன்னா, பொன்னிறமா சேமியாவை வறுத்துட்டு அப்புறம் வேகவைங்க.)
சேமியா வெந்ததும் 3/4 கப் சர்க்கரையை சேர்த்து கிளறுங்க. (சேமியா-சர்க்கரை ரெண்டும் ஒரே அளவுல போட்டது எங்களுக்கு இனிப்பு சரியா இருந்தது. சர்க்கரை அதிகம்/குறைவுன்னு நினைத்தா உங்க ருசிக்கேற்ப குறைக்கலாம் (அ) அதிகரிக்கலாம்)
சர்க்கரை கரைந்ததும், கேசரி இளகி அப்புறம் மெதுவா இறுக ஆரம்பிக்கும். அந்த ஸ்டேஜ்ல வறுத்து வைச்ச முந்திரி-திராட்சை-பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து,இன்னொரு ஸ்பூன் பட்டரும் சேர்த்து நல்லா கலக்கிவிடுங்க.
அவ்ளோதான்..பைனாப்பிள் சேமியா கேசரி தயார். செய்த உடனே ருசி பார்க்கும் வழக்கமும் கிடையாதா..கேசரி பாவம், என்னவர் ஆபீஸ்ல இருந்து வரவரைக்கும் தேமேன்னு வெயிட் பண்ணுச்சு.(நான் உண்மைதான் பேசுவேன் என்ற உங்க நம்பிக்கைகு நன்றி!;) )

இவரும் வழக்கம்போல டின்னர் டைமும்க்கு வீட்டுக்கு வந்தார்..வந்தவுடனே இரவு உணவும் முடிந்தது.சாப்பாடு,முளைகட்டிய சோயாபீன்ஸ் குழம்பு,வயலட் முட்டைகோஸ் பொரியல்-ரசம்..வாங்க,சாப்பிடலாம்! :)

எனக்கு கேசரி செய்ததே மறந்துபோச்சு!அவரே கிச்சன்ல துழாவி கண்டுபிடிச்சு, பவுல்-ல போட்டுட்டும் வந்து ருசிக்க ஆரம்பிச்சார்.அதுக்கப்புறம்தான் காமெடியே!!இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன்.உஸ்...அப்பாடா!!!

"ஸ்வீட் சேமியா ரொம்ப நல்லா இருக்கு!"-ன்னு போட்டாரே ஒரு போடு!! எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்றதுன்னே தெரில..:-| :-| :-| அது ஸ்வீட் சேமியா இல்லைங்க,இன்னொரு முறை கெஸ் பண்ணி,அதிலே இருக்கும் இன்கிரிடியன்ட்ஸ்-ஐ பாத்து சொல்லுங்க-ன்னு சொன்னேன். எல்லாம் பார்த்துட்டு முந்திரி இருக்கறது தெரியுது,நட்ஸ் சேமியா(!!!??)-வான்னாரு!! எனக்கு டென்ஷன் அதிகமாகிடுச்சு!! முந்திரி-திராட்சையைத் தவிர வேற எதுமே தெரிலையா சேமியா கேசரில?ன்னு கேட்டேன். ஓஹோ..இது சேமியா கேசரியா? நான் ஸ்வீட் சேமியான்னு நினைச்சிட்டேன்.சாரி!ஹிஹிஹி-ன்னாரு..

இவர்கிட்ட பதில எதிர்பார்த்து மனசை உடைச்சுக்கறதுக்கு பதிலா நாமே சொல்லிடலாம்னு இது பைனாப்பிள் சேர்த்த சேமியா கேசரிங்க-ன்னு நானே சொல்லிட்டேன்.இதுக்குள்ள 2 பவுல் கேசரி காலியாயிடுச்சு..ஆஹா,பைனாப்பிள் சேர்த்ததாலே டேஸ்ட் இன்னும் நல்லாருக்கு,அதான் ரெண்டாவது முறையும் சாப்பிட்டேன்னு சமாளிச்சிட்டார்.

நீங்களே சொல்லுங்க..இதை,இதை,இதைப் பார்த்தா ஸ்வீட் சேமியா மாதிரிதான் இருக்குதா?பைனாப்பிள் சேமியா கேசரி மாதிரி இல்லையாஆஆஆஆஆஆஆ? என்ன கொடுமைங்க இது???
~~~~~
அடுத்து இன்னொரு காமெடி..ஒருநாள் கடையிலே வெங்காயம் எடுத்துட்டு இருந்தேன்.அப்ப பக்கத்துல வந்த ஒரு வெள்ளைக்கார தாத்தா,நான் ஓரொரு வெங்காயமா பொறுக்கி எடுப்பதை பார்த்திட்டு, எப்படி நல்ல வெங்காயம்னு கண்டுபிடிக்கறே?ன்னு கேட்டார். நானும் சின்ஸியரா "வெங்காயம் தோல் உரியாததா..நல்லா பளபளப்பா, அழுகிப் போகாம இருக்கறதா எடுக்கணும்"னு சொன்னேன்.(நான் சொன்னது கரெக்டுதானே?நீங்க எல்லாரும் எப்படி வாங்குவீங்க?)
அப்படியே அரட்டை அடிச்சிட்டு, ஒரொரு வெங்காயமா எங்கிட்ட காட்டி,இது நல்ல வெங்காயமா?ன்னு கேட்டு கேட்டு அப்ரூவலும் வாங்கிட்டார். ரெட் ஆனியன்,ஒயிட் ஆனியன்,யெல்லோ ஆனியன் இதுலே எது நல்லாருக்கும்னும் கேட்டுகிட்டார். கடேசியா அந்தப்பக்கம் நகரும்போது.."எப்படி பொறுக்கி எடுத்து செலக்ட் பண்ணி வாங்கினாலும், தொண்டைக்கு கீழே போயிட்டா எல்லாமே ஒண்ணுதானே?"-ன்னு ஒரு போடு போட்டுட்டு போயிட்டார். ஒரொரு முறையும் இது நல்லவெங்காயமான்னு எங்கிட்ட கேக்கும்போது இந்த உண்மை இவருக்கு தெரிலயா? என்ன ஒரு நேரம் பாருங்க!

சரியான புன்னகை மன்னின்னு என் முகத்துல எழுதி ஒட்டிருக்கு போல!! ( புன்னகை மன்னி=புன்னகை மன்னனுக்கு பெண்பாலுங்க.:) )நரி முகத்தில முழிச்சிருக்கோம் இன்னைக்குன்னு மனசைத் தேத்திட்டு வீட்டுக்கு வந்தேன்.
~~~~~~
இப்படி சரமாரியான சம்பவங்களால் புண்பட்ட மனதை குறிஞ்சி,இண்டியன் ஸ்பைஸ் மேஜிக் இருவரும் 'வெர்ஸட்டைல் ப்ளாக்கர்' என்ற அவார்டு கொடுத்து ஆற்றிவிட்டாங்க..:):):)
மிக்க நன்றி குறிஞ்சி&இண்டியன் ஸ்பைஸ் மேஜிக்!

இந்த விருதினை,என்னைக் கவர்ந்து, என் கேமராவில் புகுந்துகொண்ட ஒரு அழகுப்பூவுடன்...

அகிலா,குறிஞ்சி,காயத்ரி,இண்டியன் ஸ்பைஸ் மேஜிக் மற்றும் என் வலைப்பூவைப் பின்தொடரும், ஒவ்வொரு பதிவுக்கும் தவறாமல் பின்னூட்டங்களிட்டு ஊக்கப்படுத்தும்,பின்னூட்டமிட நேரமில்லாமல் படித்து ரசித்துவிட்டு மட்டும் செல்லும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் வழங்குகிறேன்!

நீங்கள் தரும் மேலான ஆதரவுக்கும்,ஊக்கத்துக்கும் நன்றி கூறும் முகமாக எல்லோரும் இந்த விருதினை வழங்குகிறேன்..மறுக்காமல் பெற்றுக்கொண்டு என்னை கௌரவியுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொண்டு(அரசியல் மேடை வாசம் வருதோ?? ஓகே,ஓகே டென்ஷன் ஆவாதீங்க,உடம்புக்கு நல்லதில்ல.. முடிச்சிடறேன். :) ) இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.நன்றி,வணக்கம்!

Tuesday, December 7, 2010

ஸின் சிட்டி-பகுதி 2

இந்தப் பதிவில் பாரிஸ் மற்றும் பெல்லாஜியோ இரண்டு கேஸினோக்களை சுற்றிப் பார்க்கலாம் வாங்க!
பாரிஸ் கேஸினோவில் பாரிஸின் முக்கிய அட்ராக்ஷனான ஈஃபில் டவரின் மாதிரியை உருவாக்கியிருக்காங்க. பகலில் பார்க்கும்போது வெறும் மெட்டல் உருவமாக நிற்கும் ஈஃபில் டவர், மாலையில் விளக்குகள் போடப்பட்டதும், ஸ்ட்ரிப்-பின் சிக்னேச்சர் அட்ராக்ஷனாக ஆகிவிடுகிறது என்றால் அது மிகையல்ல. இரவு நேரத்தில்,தங்கநிறத்தில் ஜொலிக்கும் விளக்குகளுடன் கம்பீரமாக நிற்கும் ஈஃபில் டவர் ரொம்ப அழகா இருக்கும்.
ஈஃபில் டவரின் கீழே தான் கேஸினோ-வின் நுழைவாயில்..உள்ளே செல்கையில் நிமிர்ந்து பார்த்தால் டவரின் பிரம்மாண்டம் மிரட்டுகிறது.
ஈஃபில் டவரின் நான்கு தூண்களில் பின்னிரண்டு தூண்கள் கேஸினோவின் உட்புறம் இருக்கும்படி கட்டப்பட்டிருக்கு.படத்தில் இடது புறம் இருப்பது (கட்டடத்தின் உள்ளே இருக்கும்) ஈஃபில் டவரின் ஒரு தூண்...
கேஸினோவின் உள்ளே வழக்கம் போல ஸ்லாட் மெஷின்கள்,டேபிள் கேம் இப்படி கூட்டம் அலைமோதுகிறது.ஈஃபில் டவர் ரைடுக்கு டிக்கெட் வாங்கிட்டோம். 20நிமிஷம் வெய்ட்டிங் டைம்.. பொதுவாக வீகெண்ட் மற்றும் விடுமுறை நாட்கள்ல கூட்டம் அலைமோதும்..4மணி நேரமெல்லாம் வெயிட்டிங் டைம் இருக்குமாம். இப்படி வெயிட் பண்ண விருப்பமில்லைன்னா,எக்ஸ்ப்ரெஸ் பாஸ் என்று கொஞ்சம் அதிக கட்டணத்தில் ஸ்பெஷல் டிக்கட்ஸும் இருக்கு.) நமக்கென்ன அவசரம்?? நார்மல் டிக்கட்லயே போய்ப்பார்க்கலாம்!
டிக்கட் வாங்கியாச்சு,வாங்க,மேலே போலாம்! :)
கியூல மொத்தமே 10-20 பேர்தான் இருந்திருப்போம். 2 லிஃப்ட்கள் இருக்கு.எக்ஸ்ப்ரெஸ் பாஸ் வாங்கியவர்களுக்கு ஒன்று,நார்மல் கட்டணத்துக்கு ஒன்று என. லிப்ட்டில் ஏறியதும் சில நொடிகளில் 50-55 மாடிகள் உயரத்துக்கு கொண்டுபோய்விட்டுவிடுகிறது. வெளியே வந்தால் முழுக்க கம்பி வேலி போடப்பட்டு, ஈஃபில் டவரின் உச்சியில் இருக்கிறோம். அங்ககே தொலைநோக்கிகள் வைத்திருக்காங்க. ஒளிவெள்ளத்தில் மிதக்கும் லாஸ் வேகாஸ் நம் கண்ணைப் பறிக்கிறது.
கீழே இருக்கும் படத்தில், பாரிஸின் எதிரில் இருக்கும் பெல்லாஜியோ கேஸினோ. பெல்லாஜியோவில் முன்புறம் ஒரு பெரீய்ய வாட்டர் ஃபவுண்டெய்ன் இருக்கிறது. மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை, 15நிமிட இடைவெளியில் அந்த ஃபவுண்டெய்னில் நடக்கும் வாட்டர் ஷோக்கள் மிகவும் பிரபலம். ஐந்து முதல் ஆறு நிமிடங்கள் நடக்கும் இந்த ஷோ-வில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாடல் போடுவாங்க,அந்த இசைக்கு ஏற்ப தண்ணீரின் நடனமும், ஃபவுண்டெய்ன் உள்ளே இருக்கும் விளக்குகள் திரும்புவதும் மிகவும் அழகாக இருக்கும்.

கீழே இருந்து பார்க்கும்பொழுது ஒரு வியூ,இதுவே எதிரில் இருக்கும் ஈஃபில் டவரின் மேலே இருந்து பார்க்கையில் இன்னும் அற்புதமான ஒரு வியூ!! நாங்கள் டவரின் மேலே செல்கையில் ஒரு ஷோ நடந்து முடிந்திருந்தது. கால்மணி நேரம் காத்திருந்து, அடுத்த ஷோ முழுக்க வீடியோ எடுத்துவிட்டு,மீண்டும் காத்திருந்து இன்னொரு ஷோவும் பார்த்துவிட்டு வந்தோம்.முதல் ஷோவை வீடியோ எடுத்தவர் அடுத்த ஷோவ அட்லீஸ்ட் என்ஜாய் பண்ண வேணாமா? :)

வீடியோ இதோ..நீங்களும் பாருங்க..



பெல்லாஜியோவினுள் இந்த முறை நாங்க போகல..ஏன்னா,இதற்கு முன்பு போன இரண்டுதடவைகளும், திருப்பதி போனதும் பெருமாள் தரிசனம் பண்ணறமாதிரி,வேகாஸ் போனதும் முதல் வேலையா பெல்லாஜியோ-சீஸர் பேலஸ் இந்த இரண்டு கேஸீனோவும் போவோம்,மற்ற இடங்கள்ல கான்சன்ட்ரேட் பண்ண மாட்டோம்! :)

அதுக்கு காரணம் இல்லாமலில்லை,இந்த இரண்டு கேஸினோக்களும்தான் லாஸ் வேகாஸில் மிகவும் பிரம்மாண்டமான,பெரீய்ய, 5 நட்சத்திர அந்தஸ்துள்ள கேஸினோக்கள். அழகழகான தீம்ஸ் போட்டு டெகரேஷன்ஸ் பண்ணி வைத்திருப்பாங்க..உள்ளே போயிட்டு வெளியே வரும்போது நடந்துநடந்துநடந்து...வலில கால்கள் கெஞ்சும்!! அந்தளவுக்கு பெரிய கேஸினோக்கள். அதனால இந்த முறை அதை மட்டும் விட்டுட்டு மற்ற இடங்களை பார்த்தோம். கடந்த முறை பெல்லாஜியோவில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு...
இதோ இங்கே & இங்கே.

பகுதி-1ஐக் காண..

-தொடரும்.

Saturday, December 4, 2010

எனக்குப் பிடித்த பாடல்கள்..


ஆசியா அக்கா அழைத்த தொடர் பதிவுக்காக எனக்குப் பிடித்த பத்துப் பாடல்களைத் தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் பாடல் நெஞ்சமெல்லாம் நீயே படத்திலிருந்து..படம் பார்த்ததில்லை,ஆனால் அடிக்கடி யூட்யூப்-ல இருந்து பாட்டை கேட்பேன்.வாணி ஜெயராமின் குரலில்,இதோ..நீங்களும் கேட்டுப் பாருங்க!



அடுத்த பாடல் அக்னிநட்சத்திரம் படத்தில்இருந்து எஸ்.ஜானகி-யின் குரலில்.
இந்தப் பாடல் என் அக்காவிற்கு மிகவும் பிடித்த பாடல். அஃகோர்ஸ்,எனக்கும் பிடிக்கும்,கேளுங்க,உங்களுக்கும் பிடிக்கும்.

"நான் வானவில்லை வேண்டினால் ஓர் விலை கொடுத்து வாங்குவேன்,
வெண் மேகக் கூட்டம் யாவையும் என் மெத்தையாக்கித் தூங்குவேன்!"...ஹ்ம்ம்..நினைக்கவே சுகமா இருக்குல்ல?:)

http://www.youtube.com/watch?v=h4-KtACquDM


மெல்லத் திறந்தது கதவு-இந்தப் படத்தில் இருந்து சித்ராவின் குரலில் அடுத்த பாடல்..இது எங்க ஊரில எடுத்த படம்..அதனால கொஞ்சம் ஸ்பெஷல் பாட்டு.:) இளையராஜாவின் இசையும்,சித்ராவின் குரலும்,ராதாவின் அழகுமா அமர்க்களமா இருக்கும்.



மே மாதம் படத்திலிருந்து மார்கழிப் பூவே!
பி.சி.ஸ்ரீராமின் கேமராவும்,ரஹ்மானின் இசையும், கதாநாயகியின் டான்ஸும் அருமையாக இருக்கும். நாங்க ட்ரிப் போகும்போது தவறாமல் கேட்கும் பாடல் இது.



அனுராதா ஸ்ரீராமின் அசத்தலான குரலில் அடுத்த பாட்டு.தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் சக்கைப்போடு போட்ட பாடல்..மாளவிகாவின் டான்ஸும்,தேவா-வின் இசையுமா ஒரு சூப்பர் குத்துப்பாட்டு!:)



ஸ்வர்ணலாதாவின் குரல்-புல்லாங்குழலின் இசை இவையிரண்டும் அழகாகக் கலந்து வரும் ஒரு பாடல்,அலைபாயுதே-விலிருந்து.



கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலிருந்து,கண்ணாமூச்சி ஏனடா...சித்ராவின் குரலும்,ஐஸ்வர்யா ராயின் நடனமும்,அழகு அஜீத்தும்(!!), மம்மூட்டியும்...எதை சொல்ல,எதை விட? நீங்களே பாருங்க.



பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில்,மின்னலே-விலிருந்து வசீகரா..வீடியோ அவ்வளவா பிடிக்கலை எனக்கு,ஆனா தாமரையின் வரிகளும்,ஜெயஸ்ரீ அவர்களின் வசீகரமான குரலும் மிகவும் பிடிக்கும்.
http://www.youtube.com/watch?v=1NhKaWr3Mx4&feature=fvst

'நானும் ஒரு பெண்' படத்திலிருந்து 'கண்ணா,கருமை நிறக் கண்ணா'.. உருக்கமான ஒரு பாடல்..புறக்கணிப்பும்,அவமானமும் அடையும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை அழகாகப் படம்பிடித்திருப்பார்கள்..
http://www.youtube.com/watch?v=bopSea-7uqg

இதுவரை சொன்ன பாடல்கள் எல்லாமே எனக்குப் பிடித்த பாடல்கள்தான்,ஆனால், இந்தப்பாடல் என்னை மிகவும் பாதித்த,கவர்ந்த,மிகவும் பிடித்த...என்ன சொல்வதுன்னு தெரில,வார்த்தைகள் கிடைக்க மாட்டேன்னுது!

கண்ணதாசனின் வரிகள்,சித்தி படத்திலிருந்து, பி.சுசீலாவின் குரலில் தாலாட்டாய் வரும் அற்புதமான பாடல்.

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே!
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே!

லிங்க் தேடினேன்,கிடைக்கலை..ஒலி வடிவம் கிடைத்தது..இந்த லிங்கில் போய் கேட்டுப்பாருங்க.மனதைத் தொடும் ஒரு பாடல்...கேட்டுப் பாருங்க.

http://www.raaga.com/player4/?id=231938&mode=100&rand=0.10857778466527834

இந்த பத்துப் பாடல்கள் இப்போது நினைவு வந்தவை..இன்னும் பல பாடல்கள் இருக்கு..அப்பப்ப சொல்லறேன்.:)

இந்தத் தொடர் பதிவைத் தொடர சந்தனாவை அழைக்கிறேன்.சந்தனா மட்டும்தான்னு இல்ல,விருப்பம் இருக்கும் அனைவரும் தொடருங்கள். படிக்கும் அனைவருக்கும் நல்ல பாடல்களை ரீப்ரெஷ் பண்ண ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.ஆங்கிலத்தில் எழுதும் பதிவர்களும் தொடரலாம். தொடர்வீங்களா?? :)

Thursday, December 2, 2010

ஸின் சிட்டி...

சமீபத்தில் நாங்கள் சென்றுவந்த ட்ரிப்பினைப் பற்றி சொல்வதற்கு இந்தப்பதிவு.(அதாவது,அடுத்த மொக்கை ரெடி..ஹிஹி!!) நீங்களும் ரெடியாகிக்கோங்க.:)

டைட்டிலைப் பார்த்த யு.எஸ்.வாசிகளுக்கு எந்த நகரம்னு கண்டுபிடிச்சிருப்பாங்க. மற்றவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம்...

லாஸ் வேகாஸ், யு.எஸ்.ஸில் நெவெடா(Nevada) மாநிலத்தில் ஒரு பிரபலமான நகரம்.இதனை ஸின் சிட்டி(sin city) என்றும் குறிப்பிடுவார்கள்..அரிஸோனா மற்றும் நெவெடா இரு மாநிலங்களின் எல்லைப்பகுதியில்,கொலராடோ நதியில் உள்ள ஹூவர் டேம் கட்டப்படும்பொழுது அங்கு வேலை செய்ய ஆட்கள் யாருமே வரமறுத்தார்களாம்,காரணம் அது எந்த வசதிகளும் இல்லாத ஒரு பாலைவனப்பகுதி!! எனவே அங்கே வேலைக்கு ஆட்களை கவர்ந்து இழுக்கும் பொருட்டு, அருகில் இருந்த லாஸ் வேகாஸில் பல்வேறு கேளிக்கை மற்றும் சூதாட்ட விடுதிகள் நிறைந்ததாக உருவாக்கப்பட்டதுதான் லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப்.

லாஸ்வேகாஸில் இருக்கும் பிரபலமான கேஸினோக்களில் பார்த்த சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள நினைத்து இதனை எழுத ஆரம்பிக்கிறேன். இரவு நேரத்தில் இந்த ஸ்ட்ரிப்பில் கேஸினோக்களில் ஜொலிக்கும் விளக்குகளும்,அவ்வப்பொழுது செய்யப்படும் அலங்காரங்களும் மிகவும் அழகாக இருக்கும். ஒவ்வொரு கேஸினோக்களிலும் டேபிள் கேம்ஸ்,ஸ்லாட் மெஷின்ஸ்,உணவு விடுதிகள்,பல்வேறு கடைகள், பார்கள்,மாஜிக் ஷோ-சர்க்கஸ் இப்படி எல்லா தரப்பு மக்களையும் கவரும் அனைத்து அம்சங்களும் இருக்கும்.லாஸ்ட் இன்-பர்ஸ்ட் அவுட் மாதிரி கடைசில இருந்து ஆரம்பிச்சு அப்படியே முன்னாடி போலாம்,ரெடியாகிட்டீங்களா? ஓக்கே,ஆல் த பெஸ்ட்!
*****
இந்தப்பதிவில் நாம் பார்க்கப்போவது MGM க்ராண்ட் கேஸினோ.
பார்க்கிங் லாட்டில் காரை நிறுத்தும்போது மறக்காம, எந்த லெவல்,என்ன நம்பர்ல நிறுத்திருக்கோம்னு பாத்து வச்சுக்கணும்.கேஸினோல மட்டுமில்ல,பார்க்கிங் லாட்லயும் நாம் தொலைந்து போக வாய்ப்புகள் அதிகம்.எங்கே திரும்பினாலும் ஒரே மாதிரி இருக்கும்.:)
இது கேஸினோவின் என்ட்ரன்ஸ்ல கம்பீரமாகக் காட்சி தரும் சிங்கம்.பிரம்மாண்டமா இருக்கில்ல?

பார்க்கிங் லாட்டின் வழியாக கேஸினோவின் உள்ளே நுழைந்தால்...முதலில் கண்ணில் பட்டது 'முத்துக்களுடன் சிப்பிகள் விற்பனைக்கு' என்று ஒரு கடை..

இன்று காலை திறந்த சிப்பிகள் என்று அங்கங்கு சிப்பிகளை தண்ணீருள்ள கண்ணாடிக் கிண்ணத்தில் வைத்திருந்தாங்க. எனக்கென்னமோ நம்பிக்கையே வரல..போட்டோ எடுத்துக்கட்டுமா என்று கேட்டதும், அங்கிருந்த பெண்மணி தாராளமா எடுத்துக்கோங்கன்னு சொல்லிவிட்டார். க்ளோஸ்-அப் போட்டோல பார்த்தா,,முத்துக்கள் சரங்களாகக் கோர்க்கப்பட்ட அடையாளம் நன்றாகவே தெரிந்தது!! எப்படியெல்லாம் நம்மை ஏமாத்தறாங்க பாருங்க!!

அப்புறம் அப்படியே கேஸினோல உலவி ஒரு முக்கியமான இடத்துக்கு வந்து சேர்ந்தோம்(கேஸினோவின் உள்ளே போட்டோஸ் எடுக்கக்கூடாது).
Lion habitat என்று ஒரு இடத்தில் சிங்கங்களை,உயரமான கண்ணாடி அறைக்குள் வைத்திருக்கிறார்கள். கண்ணாடியின் வெளிப்புறம் இருந்து அவற்றை பார்க்கலாம்.
இரண்டு சிங்கங்கள் இருந்தன,மனிதர்களைப் பார்த்து பார்த்து போரடித்துப் போய்விட்டது போலும்,இரண்டுமே நல்ல தூக்கம். ஒன்று மட்டும் லைட்டா தலைய தூக்கிப்பார்த்துவிட்டு மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தது.
கண்ணாடி அறையின் கீழிருந்து வெளியே வந்தால்..சிங்கக்குட்டிகளுடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றும், ஆனால் அங்கே நமது கேமராவில் சிங்கக்குட்டியை படமெடுக்கக்கூடாது என்றும் போர்டு எச்சரித்தது.அடுத்த அறையில் போட்டோ எடுக்கலாம் என்று சொன்னாங்க..அங்கே போனா,இன்னொரு சிங்கக்குட்டி விளையாடிட்டு இருந்தது. பூனைக்குட்டி-நாய்க்குட்டிகள் போல பொம்மைகளுடன் அப்படி ஒரு விளையாட்டு! :) ரொம்ப அழகா இருந்தது.

வெளியில் இருந்த எல்லாரும் எக்ஸைட் ஆகி கத்துவதும், போட்டோ எடுப்பதுமா இருந்தாங்க. தான் அப்படி ஒரு லைம்லைட்ல இருப்பது கண்ணாடியின் அந்தப்புறம் இருந்தவருக்கு தெரில,அவர் பாட்டுக்கு ஜாலியா விளையாடிட்டு இருந்தார். திடீர்னு அறையின் கதவு திறந்து,முன்னறையில் போட்டோக்கு போஸ் குடுத்துட்டு இருந்தவர் இங்கே வர,இவர் போஸ் கொடுக்கப் போய்விட்டார். அங்கிருந்து வரவே மனதில்லாம சிங்கக்குட்டியை வீடியோ எடுத்துட்டு இருந்தேன். சில நிமிடங்கள் பொறுமை காத்த என்னவர்,போலாம் வா என்று வெளியே போய்விட்டார்.நானும் கிளம்பிட்டேன்.குழப்பமான சத்தங்களுக்கு நடுவில் ஒருவரி தமிழும் கேட்கும்,கவனமாப் பாருங்க! :)



இன்னும் அதிகத் தகவல்கள் வேண்டுவோர்,அங்கங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புகளை படித்துப்பாருங்க.மீண்டும் அடுத்த பதிவில் வேறு ஒரு கேஸினோ பற்றிய விவரங்களுடன் சந்திப்போம்.நன்றி!

LinkWithin

Related Posts with Thumbnails